search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்"

    • நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.
    • சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர்.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்று அவர்களின் குறைகளை கேட்டறிந்தார்.

    இதில் முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, கல்வி உதவித்தொகை, இலவச வீட்டு மனைப்பட்டா, வங்கி கடன் உதவி, குடிசை மாற்று வாரிய வீடு, குடிநீர் வசதி, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் வேண்டி பல்வேறு கோரிக்கைகள் குறித்து மொத்தம் 530 மனுக்களை பொதுமக்கள் அளித்தனர். அவற்றைக் பெற்றுக்கொண்ட கலெக்டர் பரிசீலனை செய்து உரிய அலுவலர்களிடம் வழங்கி மனுக்களின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென உத்தரவிட்டார்.

    தொடர்ந்து கூட்டுறவுத் துறை சார்பில் 14 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.83.50 லட்சம் மதிப்பீட்டில் மகளிர் சுய உதவிக் குழு கடனுதவி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம் சார்பில் பணியிட விபத்து மரண உதவித்தொகையாக தலா ரூ.5 லட்சம் வீதம் 2 பேருக்கு ரூ.10 லட்சம் உதவித்தொகை, 6 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.31,750 மதிப்பீட்டில் காதொலி கருவி, சக்கர நாற்காலி உள்ளிட்டவை என மொத்தம் 22 பயனாளிகளுக்கு ரூ.93.81 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.

    மேலும் மாற்றுத்திற னாளிகள் நலத்துறையின் கீழ் உலகவங்கி நிதி உதவியுடன் செயல்பட்டு வரும் தமிழ்நாடு உரிமைகள் திட்டம், சமூகத் தரவு பதிவு குறித்த விழிப்புணர்வு பிரசுரங்கள், கையேடுகளை மாவட்ட கலெக்டர் வெளியிட்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து அவர்களின் கோரிக்கை மனுக்களை பெற்றார்.

    கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சுமன், மாவட்ட வழங்கல் அலுவலர் முத்துராமலிங்கம் உள்ளிட்ட பல்வேறு துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

    ×